சென்னை, ஜூன் 2- சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படை யில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கைதி கள் தங்கள் அரும்பாடுபட்டு வளர்த்த வேர்க்கடலையை அதிகாரிகளுடன் இணைந்து அறுவடை செய்து மகிழ்ந்தனர். சென்னையை அடுத்த புழலில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட் டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதி களை அவர்களின் நன்னடத் தையின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் பல்வேறு பணிகளில் ஈடு படுத்தி வருகின்றனர். ஏற்கனவே சிறைத்துறை யின் சார்பில் சிறைச்சாலை வளாகத்தில் முடி திருத் தும் நிலையம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வகை யான கடைகள் கைதிகளை கொண்டு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறை எண் இரண்டில் மூலிகை விவசாயம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது தோட்ட வளாகத்தில் கைதிகள் வேர்க்கடலையை வளர்த்து வந்தனர். இதனையடுத்து வேர்க் கடலையை அறுவடை செய்யும் பணியில் கைதி களுடன் இணைந்து சிறைத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதனை சிறைத் துறை துணைத் தலைவர் முருகேசன் மேற்பார்வை யிட்டார். ஏதோ ஒரு கோபத் தில் தவறை செய்துவிட்டு தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கு இது மறுவாழ்வு அளிக்க பெரு மளவில் உதவும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.