states

தீபாவளி முன்பதிவு: அரசு பேருந்து இருக்கைகள் நிரம்பின

சென்னை,செப்.26- சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊரில் செல்லும் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென் னையிலிருந்து தென் மாவட்டங் கள் மற்றும் கோவை, சேலம் மார்க்க மாக செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன.  தீபாவளிக்கு முந்தைய 22, 23 ஆகிய தேதிகளில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை நாடி செல்கிறார்கள். அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி பயணத் திற்கான முன்பதிவு கடந்த வாரம்  தொடங்கியது. தமிழகம் முழுவதும்  450 அரசு விரைவுப் பேருந்துகளில் பல்வேறு நகரங்களுக்கு செல்வ தற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான அரசு விரைவு பேருந்துகளில் இடங்கள் நிரம்பி விட்டன.  குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, செங்கோட்டை, மதுரை,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு செல்லக் கூடிய அரசுப் பேருந்துகளில் இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பேருந்துகளில் மட்டுமே இடங்கள் காலியாக இருக்கின்றன.

;