சென்னை, ஆக.11- சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கி றது. அதன் மூலம் பல லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அந்த மாநாட்டிற்கு இலச்சினை வெளியிடப்பட்டது. சென்னை உலக முதலீட்டா ளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். மாநிலத் தின் பொருளியல் பேரளவு வளர்ச்சி யடையும் என்று முதல்வர் கூறினார். தமிழ்நாட்டின் தூதுவராகச் செயல்பட்டு முன்னணி நிறுவனங் கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று தொழில் துறைக் கூட்டமைப்பினரை அவர் கேட்டுக்கொண்டார்.