பனாமா சிட்டி, ஜூலை 16- எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் வலதுசாரி அரசின் தோல்வியைக் கண்டித்து பனாமா மக்கள் நடத்தி வரும் எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர் கின்றன. பனாமாவில் படுதீவிரமாக வலதுசாரிக் கொள் கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இத னால் வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப் பின்மை பெருமளவில் அதிகரித்தது. குடியிருக்க வீடில்லாமல் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் ஏறியது. வலதுசாரி அரசின் கொள்கைகள்தான் கார ணம் என்று மக்கள் போராடி வருகிறார்கள். போராட் டத்தின் உண்மைத்தன்மையை அங்கீகரிக்க ஜனாதி பதி லாரென்டினோ கோர்டிசோ மறுத்து வருகிறார். இந்நிலையில் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடி போன்றவை பிரச்சனைகளை தீவிரப் படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ஜனாதிபதி கோர்டிசோ கூறியிருப்பது பொருத்தமற்றதாக இருக்கிறது என்று போராடி வரும் வாழ்க்கைக் கான ஒன்றுபட்ட மக்கள் கூட்டணி, மக்கள் உரிமை களுக்கான தேசியக் கூட்டணி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஒன்றியம் ஆகியவை கூறியுள்ளன. சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். நவீன தாராளமயத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கடந்த வாரம் முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ள அமைப்புகள் பெரும்பாலானவை அரசுக்கு ஆதரவாக இருப்பவை என்பதை போராடும் அமைப் புகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஊழலில் திளைக்கும் அந்த அமைப்புகளோடு பேச்சுவார்த்தை என்பதே நெருக்கடிக்குத் தீர்வு காண விரும்பவில்லை என்ப தையே காட்டுகிறது. சொல்லப்போனால், மக்க ளோடு நின்று போராடிக்கொண்டிருக்கும் சில அமைப்புகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவே யில்லை. இந்தக் காரணங்களைச் சுட்டிக்காட்டியே போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.