states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதிமுக பொதுக்குழு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

சென்னை,ஜூன் 28- அண்மையில் நடந்த முடிந்த அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான சண்மு கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுக்குழுவில் தீர்மானங்களை நிராகரித்தது; நிரந்தர அவைத் தலை வராக தமிழ்மகன் உசேனை நியமனம் செய்தது, ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது, ஜூலை  11இல் அடுத்த பொதுக்குழு நடைபெறும்  என அறிவித்தது இவை அனைத்தும் உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என மனுவில் குற்றச்சாட்டியுள்ளார்.இந்த  வழக்கு விரைவில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

தாம்பரம் விமானப்படை பிரிவில் வேலைவாய்ப்பு

சென்னை, ஜூன் 28- சென்னை தாம்பரம்  மற்றும் பெங்க ளூரு, செகந்திரபாத்தில் உள்ள விமானப் படை பிரிவுகளில் காலியாக உள்ள  குருப் “சி”  சிவிலியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் சமையலர் (3), வாகன ஓட்டுனர் (1), ஹவுஸ் கீப்பிங் பணியாளர் (1) ஆகிய பணியிடங்க ளுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள னர். அதேபோல் பெங்களூரு மற்றும்  செகந்திராபாத்தில் உள்ள விமானப் படையின் பல்வேறு பிரிவுகளிலும் சமைய லர், மருத்துவமனை ஆயா உள்ளிட்ட பணி களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்ற னர். கல்வித்தகுதி, வயது வரம்பு,  இடஒதுக்கீடு மற்றும் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி உள்ளிட்ட விவரங்க ளுக்கு 18 - 24 ஜூன் 2022 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் வெளி யிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர் வாரிசுதாரருக்கு பணிக்கொடை

சென்னை, ஜூன் 28- ஓய்வு பெற்ற திருக்கோயில் பணி யாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக் கொடை மற்றும் பணிக்காலத்தில் இறந்த  திருக்கோயில் பணியாளர்களின் வாரி சுதாரர்களுக்கு குடும்பநல நிதி ஆகிய வற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (ஜூன் 28) வழங்கினார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற திருக்கோயில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு ரூ.2,70,09,752 பணிக்கொடை வழங்கும் அடையாளமாக 12 ஓய்வு பெற்ற திருக்கோ யில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்க ளுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-கபாலீஸ்வரர், வல்லக் கோட்டை- சுப்பிரமணியசுவாமி கோவில்கள் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக் கட்டளை கோவில் ஆகியவற்றில் பணி யாற்றி, பணிக்காலத்தில் உயிரிழந்த 3  திருக்கோயில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை  முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் ஜெ. குமரகுருபரன், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.