states

img

அரசியல் ஆதாயம் கருதி உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்ப்பதா?

சென்னை,செப்.25-  அரசியல் ஆதாயம் கருதி தமிழ் நாட்டிற்கான தண்ணீரை வழங்காமல் காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் கர்நாடக அரசு மற்றும் அந்த மாநில பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் சார்பில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் பங்கீடு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. அரசியல் சாசன அடிப் படையில் இத்தீர்ப்பினை ஏற்று  செயல் படுத்துவதே சம்பந்தப்பட்ட மாநி லங்களின் அரசியல் கடமையாகும். நடப்பாண்டில் காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி போதிய தண்ணீர் கிடைக்காததால் கருகி அழியும் நிலையில் உள்ளது. பல ஆயிரம் ரூபாய் செலவழித்து சாகுபடி செய்த  விவசாயிகள் வேதனையில் மூழ்கி யுள்ளனர். இதே நிலைமை நீடிக்கு மானால் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகி விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காவிரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு நீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை தொட ர்ந்து அணுகி வற்புறுத்தியது, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமி ழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து முறையிட்டது, இறுதியாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடு த்தது போன்றவைகள் மூலம் தமிழ் நாட்டின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம்  வரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 108.4 டி.எம்.சி. அளவில்  இதுவரை 39.8 டி.எம்.சி. அளவு மட்டுமே  தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள தண்ணீரை வழங்கி குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டு மென்ற தமிழகத்தின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம்  முழு மையாக பரிசீலிக்காமல் இழுத்தடித்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தொடு த்த வழக்கினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையில் தண்ணீர் திறப்பதை கர்நாட கத்தில் உள்ள பாஜகவினரும், அதன் ஆதரவு அமைப்புகளும் எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இப்போரா ட்டத்திற்கு பாஜக தலைமை தாங்குவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோக மாகும். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது, கேள்விக்குள்ளாக்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான தாகும். அரசியல் ஆதாயம் கருதி கர்நாட கத்தில் நடைபெறும் போராட்டங் களுக்கு செவிமடுத்து தண்ணீரை திறந்து விட மாட்டோம் என மீண்டும், மீண்டும் காவிரி மேலாண்மை வாரி யத்தை அணுகி தமிழ்நாட்டின் உரிமை யை கர்நாடக அரசு மறுப்பதும் தேவை யற்ற சட்ட போராட்டங்களுக்கும், நீதி மன்ற அவமதிப்புக்கும் உள்ளாவ தோடு தமிழ்நாடு, கர்நாடக மக்களின் சகோதர உணர்வுக்கு விரோதமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவு அடிப் படையில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு தண்ணீரை வழங்காமல் தங்களது நீர்த் தேவை பூர்த்தி அடைந்த பின்னரே தண்ணீர் அளிக்க முடியும் என்ற கர்நா டக அரசின் அணுகுமுறை உலக அள விலான நீர் பங்கீட்டு விதிமுறை களுக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, கிடைத்துள்ள நீரில் பற்றாக்குறை சதவிகித அடிப் படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.