states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குஜராத் கலவரம் தொடர் பான பிபிசி ஆவணப் படத்தை தில்லி பல் கலைக்கழக மாணவர்கள் திரையிட இருந்த நிலை யில், பல்கலைக்கழகம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் 144  தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. 144  தடை உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் நடத்தியநிலையில், காவல்துறையினர் மாண வர்களை குண்டுக்கட் டாக தூக்கி சென்றனர்.

சீமைக் கருவேல மரங் களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தா விட்டால் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை எடுக் கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீன எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10  பாலஸ்தீனர்கள் பலியா கினர்.

மகளிர் இளையோர் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் திருப்தி அளிக்கும் வகை யில் அமல்படுத்தப்பட்டு ள்ளது என தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரி வித்துள்ளது.

உலகச் செய்திகள்

எஸ்தோனியாவுடனான உறவை முக்கியத்துவம் இல்லாத  ஒன்றாக ரஷ்யா வகைப்படுத்தியுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது எஸ்தோனியாவில் உள்ள ஆட்சி, ரஷ்யாவுடனான உறவை சிதைத்து விட்டது’’ என்று கூறியிருக்கிறது. ரஷ்யாவில் உள்ள எஸ்தோனியாவின் தூதரை அழைத்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இதற்குப் பதிலடியாக, எஸ்தோனியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தைக் காலி செய்யுமாறு சொல்லியிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்துடன் பிரச்சனை ஏற்பட்டதால் குவைத் நாட்டின் அமைச்சரவை பதவி விலகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் ஷேக் அகமது நவாப் அல் சபா  தலைமையிலான குவைத் அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. அரசு முன்வைத்த கடன் நிவாரணம் குறித்த மசோதாவை  நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளாததால், பட்டத்து இளவரசர் ஷேக் மெஷாலிடம் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் அளித்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஏராளமான இடங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனவரி 23 ஆம் தேதியன்று பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதுகுறித்து அந்நாட்டின் எரிபொருள் துறை அமைச்சர் குர்ரம்  தஸ்தகிர் பேசுகையில், “நாட்டிலுள்ள அனைத்து 1,112 மின்நிலை யங்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் அவ்வப்போது துண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாதத்தில் இரண்டாவது முறையாக இப்படி ஏற்பட்டுள்ளது.