பத்தனம்திட்டா, நவ.27- கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைத் துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப் பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர் களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்தி லும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, 3 மணிக்கே தற்போது திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையில் நடை திறப்பு 4 மணியில் இருந்து 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று சபரிமலையில் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஞாயிறன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக காணப்பட்டது. சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கடை களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உரிய விலை யில் விற்கப்படுகின்றனவா? தரமாக உள்ளதா? என அவ் வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.