தமிழக காவல் துறை யின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனுக்களை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்த வழக்கு ஒன்றில் மனுதாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், மூவரும் துறை ரீதியான நட வடிக்கைகளை எதிர்கொண் டதாலும் அவர்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது உயரதி காரிகளின் பொறுப்பு என்றும், சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்து வருவதாக வழக்கு விசார ணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். நேர்மையானவர்களை சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டார்.