states

img

கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியானோருக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

கடலூர்,ஜூன்.6-  கடலூர் அருகே ஏ.குச்சி பாளை யத்தில் கெடிலம் ஆற்றில் தடுப் பணை அருகே குளிக்கச் சென்ற சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 5) தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்தனர். அவர்களது உடல்கள்  மீட்கப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், உடற்கூறாய்வு செய்து  திங்களன்று(ஜூன் 6) உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. குச்சிப்பாளையத்தை சேர்ந்த 5 பேர் உடல்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன்,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தட்சி ணாமூர்த்தி, கடலூர் மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், நெல்லிக் குப்பம் பகுதி செயலாளர் எம். ஜெய பாண்டியன், பகுதிக் குழு உறுப்பி னர் சுந்தரபாண்டியன்,  வைத்தி லிங்கம் சிஐடியு இணைச்செயலாளர் சாவித்திரி, சாந்தகுமாரி உள்ளிட் டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.