states

ஆளுநர் ரவி பதவி விலகக்கோரி சிபிஎம் இன்று முற்றுகை

சென்னை,ஜன.19- தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி பதவியை விட்டு வெளியேறக் கோரி இன்று (ஜனவரி 20) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப் படுகிறது. தமிழ்நாடு பெயரை பயன்படுத்த மறுத்து தமிழ்நாட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தியது, சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிட மறுத்து ஆளுநருக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த கடமைகளை நிறைவேற்றத் தவறியது, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொதுத்தளங்களில் பேசுவது, தமிழ்நாட்டின் பெருமைகளையும், சட்டப் பேரவையின் மாண்புகளையும் சிதைத் தும், அரசியல் சாசன சட்டத்திற்கு விரோத மாகவும், கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைத்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவியை விட்டு வெளியேற வும், ஒன்றிய அரசு அவரை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 20 காலை 10 மணிக்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலை மையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை உட்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர் என்று கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.