states

img

செப். 7 மறியல் போரில் 1 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

நாகர்கோவில் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

நாகர்கோவில், செப் 4- விலைவாசி உயர்வு, தீவிரமடையும் வேலை யின்மை ஆகிய மக்களின் அடிப்படைப் பிரச்சனை களுக்கு காரணமாக உள்ள மோடி அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கைகளை அம்பலப் படுத்தி செப்டம்பர் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துகிறது என மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு காரணமான மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி செப்டம்பர் 1 முதல் 7 வரை பிரச்சார இயக்கத் தையும் போராட்டத்தையும் நடத்துகிறது. இதன்  ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக நூற்றுக்கணக்கான மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக்கள், இடைக்கமிட்டிகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 6 வரை தொடர்ந்து நடைபெறும் இப்பிரச்சாரத்தில் கட்சி யின் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் முத்தாய்ப்பாக செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் 500 மையங்களில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். இப்போராட்டத்திற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்  வைத்தும் கன்னியாகுமரி மாவட்டத் தில் கட்சியின் சார்பில் நடைபெற்ற நடைபயணம் மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார்.  அப்போது அவர் மேலும் பேசியதாவது:

இதுவும் பரிசு தானே?

விலைவாசி கடுமையாக உயர்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 குறைத்ததை, மோடி தாய்மார்களுக்கு கொடுத்த பரிசு என பாஜகவினர் பெருமைப்படுகிறார்கள். அப்படியானால் 410 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயுவை 1200 ரூபாயாக உயர்த்திய தும் மோடி கொடுத்த பரிசுதானே.  2014 இல் மோடி ஆட்சிக்கு வந்தபோது உலக அரங்கில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை  வெறும் 142 டாலர். பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்றது. டீசல் 60 ரூபாய். எரிவாயு 410 ரூபாய்.  இன்று கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக சரிந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் விலை நூறை கடந்துவிட்டது. டீசல் விலையும் அதை நெருங்கிவிட்டது. எரிவாயு விலை 1080 ஆகிவிட்டது. இந்த விலைகளை உயர்த்தி கமிஷன் பெறுவது பாஜக தான். 200 ரூபாய் விலை குறைப்பு கூட பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த உருவான இந்தியா கூட்டணி மீதான அச்சம்தான் காரணம். அரிசி, கோதுமை, உணவுப்பொருட் கள் மீது ஜிஎஸ்டி விதிக்கும் மோடி அரசுதான் விலைவாசி உயர்வுக்கு காரணம்.

10 லட்சம் கூட இல்லையே!

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக கூறியது. ஒன்றிய அரசில் காலியாக உள்ள 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நிரப்பக்கூட மோடி அரசு முன்வரவில்லை. கேரள அரசு ஆண்டுக்கு 50  ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கு கிறது. நவீன தொழில்நுட்பங்கள் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு வெறும் 63 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியுள்ளனர். இதுபோன்ற மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் பாஜக அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைவது உறுதி. 

மக்களை திசைதிருப்பும் திட்டம்

இத்தகைய நிலையில்தான் மோடி அரசு ஒரே  நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை சூழ்ச்சிகர மாக அறிவித்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. நடைமுறை சாத்தியமில்லாதது. ஆனால் இத்தகைய திட்டத்தை கொண்டுவரும் நோக்கத்துடன்தான் அவசர அவசரமாக நாடாளு மன்ற சிறப்புக் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்க இந்தியா கூட்டணி தீவிரப் போராட்டத்தை துவக்கியுள்ளது.

வன உரிமைச் சட்டத்தை திருத்தினால்

வன  உரிமைச் சட்டம்-2006 நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக இருந்தது. அந்த சட்டம் திருத்தப்பட்டால் பழங்குடி மக்களுக்கு கிடைத்துள்ள வன உரிமை பறிபோகும். மற்றொன்று கடற்கரை மேலாண்மை சட்ட திருத்த மசோதா. இந்த சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடற்கரைகளில் சுற்றுலா மாளிகை களை அமைப்பதற்கான உரிமையை பெறு வார்கள். இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்பது குமரியில் நடத்தப்பட்ட நடைபயணத்தின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.