states

1908 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்துக்கு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கும்

தஞ்சாவூர், ஜூலை 22 -  பதிவுத்துறையில் 1908 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்துக்கு விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார். திருச்சி கோட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: கடந்த பத்தாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ஓராண்டில் வருமானம் உயர்ந்துள்ளது. தமி ழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் இருந்த நிலை யில் தற்போது 6 லட்சமாக உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம்  ஆண்டு வரை லோக் ஆயுக்தா கமிட்டி  மூலம் தமிழகத்தில் 6 லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது உண்மைதான். ஆனால் எந்த காலத்தில், யாரால், எங்கு நடந்தது என தெரிவிக்காமல், தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது போல கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கர ணை சதுப்புநில பகுதிகளில் பல ஆயி ரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த துறையினர் சம்பந்தப்பட்டுள்ளா ர்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பெற்றுத் தர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பதிவுத்துறை 1908 சட்டத்திருத்தத்திற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். அதன் பிறகு போலியாக பத்திரப் பதிவு செய்தால் 3 முதல் 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். அதன்படி ஆவணத்தை எழுதுபவர்கள், அதற்கு சாட்சியாக துணை போகக் கூடியவர்கள் என அனைவருக்கும் தண்டனை கிடைக்கும். போலியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது ரத்து செய்யப்படும். தமிழகத்தில் 50 இடங்களில் பழமை யான பதிவுத்துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டவும், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாவுக்கு 29 அலுவலகங்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பத்திரப்பதிவு அலுவ லர்கள் பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும்.  இவ்வாறு அமைச்சர் மூர்த்தி பேசினார். முன்னதாக பதிவுத் துறையில் பயன் படுத்தப்பட்ட பழமை வாய்ந்த பொருட்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டார்.  ஆய்வுக் கூட்டத்தில் சட்டத்துறை அமை ச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேக ரன், சாக்கோட்டை க.அன்பழகன், கா. அண்ணாதுரை, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல் வம், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் மற்றும் வணிக வரித்துறை மற்றும் பதி வுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.