states

பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப கேட்டு சென்னையில் அரசு ஊழியர்கள் ஊர்வலம்

சென்னை,ஜூலை 24 - பறிக்கப்பட்ட சலுகை களை திரும்ப வழங்கக் கோரி திங்களன்று (ஜூலை 24) மாவட்டத் தலை நகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். அரசுத் துறைகளில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும், சிறப்பு முறை ஊதியம், தொகுப் பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிக ளில் நிரந்தர வேலை வாய்ப்பை அழிக்கும் அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்கத்தை பணிக் காலமாக கருதவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலி யுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென் சென்னை, வடசென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தின் தலைவர் கு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.அன்பரசு, “தேர்தல் வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அதிமுக ஆட்சி யில் வழங்கப்பட்ட அக விலைப்படி உயர்வை கூட, திமுக ஆட்சியில் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது”என்றார். ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட சலுகைக ளால், அரசு ஊழியர்கள் ஆசி ரியர்களுக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. சரண் விடுப்பு முடக்கி வைத்தி ருப்பதன் வாயிலாக ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் இழக்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல் படுத்தாமல், சோமநாதன் குழு அறிக்கையை பரி சீலிப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இது அதிமுக ஆட்சியை போன்றே முதுகில் குத்தும் செயல் என்றும் அவர் கூறி னார். இந்த ஊர்வலத்திற்கு சங்கத்தின் வட சென்னை மாவட்டத் தலைவர் வே. விஜயகுமரன் தலைமை தாங்கினார். பேரணியின் நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலை வர் சி.கலைச்செல்வி, வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் த.முத்துக்குமார சாமிவேல், பொருளாளர்கள் பெ.ஜெய ராமன் (தென்சென்னை), ஏழுமலை (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.