states

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சித்தரேவு கோவிலுக்குள் அருந்ததிய மக்கள் நுழைந்து வழிபட்டனர்

திண்டுக்கல், நவ.18- உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப்படி  பழனி உச்சிகாளியம்மன் கோவிலுக்குள் பட்டிய லின மக்கள் அனுமதிக்கப்பட்டு, சாமி கும்பிட்டனர்.   திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  சித்தரேவு கிராமத்தில்  உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநா யகர் கோவிலில் பொது மக்கள் சென்று வழிபடு வது வழக்கம். கடந்த பத்து வருடகாலமாக  பட்டி யலின மக்களை கோவிலிற்குள் சென்று வழிபட விடாமல் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீண்டாமை கடைப்பிடிப்பதாகவுகம், இதனை  எதிர்த்தும் கோவிலுக்குள்  அனுமதி கோரியும், தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள், அமர்வு கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். எனவே  கடவுளை வழிபட எந்த ஒரு பாகுபாடும் பார்க்கக்  கூடாது என்று கூறினர். இது போன்று அரசியல் சாசனத்தை மீறுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் பட்டிய லின மக்கள்  செல்வ விநாயகர் மற்றும் உச்சிகாளி யம்மன் கோவிலில் சென்று வழிபடலாம் என்று என்று உத்தரவிட்டனர்.

 இந்நிலையில் செவ்வயான்று உச்சிகாளி யம்மன் கோவிலுக்குள் நீதிமன்ற உத்தரவின் படி பட்டியலின  மக்கள் நுழைய முயன்றனர். இத னையடுத்து அப்பகுதி ஆதிக்க சமூகத்தினர் பட்டி யலின மக்களை அனுமதிக்க முடியாது என்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் வரு வாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதி காரிகள் எச்சரித்த பிறகு பட்டியலின  மக்கள் அனு மதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் கூறுகையில், அருந்ததியர் மற்றும் தலித் மக்களை கோவி லுக்குள் நுழைய விடமாட்டோம் என்று  சாதி  ஆதிக்க சமூகத்தினர் தடுப்பது கண்டனத்திற்குரி யது. எனவே அருந்ததிய மக்களை  கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றார்.  இது  தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கூறுகை யில், 2013ம்ஆண்டு முதல் பட்டியலின மக்கள்  ஆலய நுழைவுக்காக தொடர்ந்து போராட்ட்கள் நடைபெற்று வருகின்றன.  2017 கோவில் பூட்டப்பட்டது. எங்கள் கட்சியின் ஆலோசனைபடி தோழர் மணி வழக்கு தொடர்ந்தார்.  உயர்நீதி மன்றம் நீதியின் பக்கம் நின்று பட்டியலின மக்களை ஆலயத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது என்றார்.  கோட்டாட்சியர், தாசில்தார். மாவட்டக் காவல்  துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னி லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து அருந்ததிய மக்கள் சாமியை தரிசிக்க அனுமதித்தனர்.