states

சோழன், குருவாயூர் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்

சென்னை, ஜூலை 26- சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சோழன் மற்றும்  குருவாயூர் விரைவு ரயில்கள் நேரத்தை மாற்றி அமைத்துள்ள தாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின்  நேரம் மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் சென்னை யில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் வருகிற 14 ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15  மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் (22675)  காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திற்கு 8.13 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு  திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு  சென்றடையும். திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படும் சோழன் விரைவு ரயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை  6.15 மணிக்கு வந்தடையும். இது தவிர, சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும். நாங்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை  மாற்றப்படவுள்ளது. இந்த 2 ரயில்களின் நேரம் மாற்றம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.