states

சோழர் கால சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சென்னை,செப்.5- தஞ்சாவூர் மாவட்டம் திருவீதிக் குடியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு காவல்துறையிடம் செப்டம்பர்  மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தஞ்சாவூர் திருவீதிக்குடி கண்டியூரில் உள்ள 2,000 ஆண்டு கள் பழமையான அருள்மிகு வேதபு ஸ்ரீவரர் கோயிலில் இருந்த 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர் சிலையை 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. இதுதொடர்பாக 35 ஆண்டுக ளுக்கு முன்பு நடுகாவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆகவே நடராஜர் சிலையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டி ருந்தார். இதுதொடர்பான விசாரணை யில், நடராஜர் சிலையை திருடி விட்டு போலியான சிலையை வைத்து  சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திருடுப்போன நடராஜர் சிலையின் புகைப்படத்தை பாண்டிச்சேரி இந்தோ பிரெஞ்சு நிறுவனத்திடம் பெற்ற காவலர்கள், புகைப்படத்தை வைத்து இணையதளங்களில் தேடியுள்ளனர். அப்போது நியூ யார்க்கில் உள்ள ஆசிய சொசைட்டி அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, 62 ஆண்டுக ளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர்  சிலையை, யுனெஸ்கோ ஒப்பந்தத் தின்படி அமெரிக்காவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் சிலை  கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை யினர் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோயிலில் வேறு ஏதேனும் சிலை கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;