states

குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே ஆர்எஸ்எஸ் தலைவராக இருப்பதேன்?

பெங்களூரு, மே 31- “ஆர்எஸ்எஸ் அமைப்பில் குறிப் பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்  டுமே தலைவராக இருப்பது ஏன்;  தலித்துக்கள் மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தலை வராக நியமிக்கப்படாதது ஏன்? என்று  கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கி ரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா  கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர் பாக சித்தராமையா டுவிட்டரில் கூறி யிருப்பதாவது: ஆர்எஸ்எஸ். அமைப்பில் ஒரு குறிப்  பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய  பதவியில் இருப்பது ஏன்?. இந்துக்களாக இருந்தாலும் தலித் உள்பட பிற்படுத்தப்  பட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக-வினர் பதில் கூற வில்லை. எனது கேள்விக்கு பதிலளிக்க  முடியாத பாஜகவினர் என்னை தனிப் பட்ட முறையில் தாக்கி பேசுகின்றனர்.  இந்த சிறிய கேள்விக்கு கூட பதில ளிக்க முடியாத 97 ஆண்டு வரலாறு கொண்ட ஆர்எஸ்எஸ் ஒரு பலவீனமான அமைப்பா?. என்று கேட்டால், இது பற்றி அறிய ஆர்எஸ்எஸ் அலுவலகம்  வரும்படி என்னை அழைக்கிறார்கள். அங்கு சென்று 40 சதவிகித கமிஷன் பெறு வது எப்படி? விலை கொடுத்து எம்எல்ஏக்  களை வாங்குவது எப்படி? என்பது அறிந்து கொள்ள வேண்டுமா? ஆர்எஸ்எஸ் அலு வலகத்திற்கு சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலே சாட்சி. அவ ருக்கு கலாச்சாரம் உள்ளிட்ட எதுவும் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் முக்கிய பதவியில் இருப்பது ஏன்? மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?- இந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு நான் மீண்டும் கேட்கிறேன்.’’ இவ்வாறு சித்தா ரமையா குறிப்பிட்டுள்ளார்.