states

தீக்கதிர் விரைவு செய்திகள்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 4- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்க ளுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரண மாக திங்களன்று (ஜூன் 5) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்யவாய்ப் புள்ளது. 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு  தள்ளி வைக்கப்படுமா?

சென்னை, ஜுன் 4- தமிழ்நாடு முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பற்கான ஆயத்த பணி கள் நடைபெற்று வருகின்றன. இதற் காக மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும், 6 முதல் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம்  தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்  என்று முதலில் அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அறிவித்தார். ஆனால் தற்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்பட வில்லை. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த  பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல்  வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த  4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவேக் காணப்படுகிறது. இதனால் பள்ளிகள் 7ஆம் தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளன. எனவே பள்ளிகள் திறப்பது  மீண்டும் தள்ளிப் போகுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு 

தருமபுரி, ஜூன் 4- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 4000 கன  அடியாக அதிகரித்துள்ளது.  சனிக்கிழமை மாலை வினாடிக்கு 2000  கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து,  ஞாயிறன்று  (ஜூன் 4) 4000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில்  மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 103.730 அடியாக உள்ளது. அணைக்கு  வினாடிக்கு 2,267 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் திட்டமிட்டபடி வரும் 12 ஆம்தேதி டெல்டா பாசனத் திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.