states

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை

மதுரை,செப்.15- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.  சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர் என்பவர் டிவிட்டர் வலைத்தளத்தில்  ‘நீதித்துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என பதிவிட்டார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்ற வியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை  ஏற்கெனவே நடைபெற்ற போது நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், “நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக குறிப்பிடும் வீடியோ பதிவுகள் மற்றும் பிற பதிவுகளை எனக்கு வழங்க வேண்டும்.

நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரி வித்தார்.  இந்நிலையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புக ழேந்தி அமர்வு முன்பு செப்டம்பர் 15 வெள்ளியன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்பவராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கில் சோமயாஜி காணொலி மூலம் வாதிடுகையில், ”சவுக்கு சங்கர் பேசியதும், எழுதியதும் நீதிமன்ற அவமதிப்பு. இதற்காக அவரை தண்டிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து மாலையில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தொடர் பான அவரது கருத்துக்களை சமூக வலைதளங்களில் நீக்கவும் உத்தரவிட்டனர். தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

;