சண்டிகர் மேயர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
காங்கிரஸ் - ஆம் ஆத்மி அடங் கிய “இந்தியா” கூட்டணி வெற்றி பெறும் சூழலை தேர்தல் அதிகாரி மூலம் தடுத்து, தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றி சண்டி கர் மேயர் பதவியை கைப்பற்றியது பாஜக. பாஜகவின் இந்த முறைகேடான வெற்றியை செல்லாது என அறிவிக் கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுக்கு எதிராக தடை விதிக்க மறுத்து, தேர்தல் தொடர்பாக சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சண்டிகர் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதி பதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆம் ஆத்மி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் சிங்வி ஆஜராக உள்ளார்.
5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்க ளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் 10ஆம் தேதி தென் மாவட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதி களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை குழு இன்று முதல் சுற்றுப் பயணம்
சென்னை, பிப்.4- மக்களவைத் தேர்தல் தேதி அறி விப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுகவின் தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில், மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் கூட்டணி கட்சியினர் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்ச னைகள் உள்ளது, மக்களவையில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன, மக்க ளின் கோரிக்கைகள் என்னென்ன, என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக முடிவு செய்துள்ளது. பொதுமக்கள், வணிகர்கள், விவ சாயிகள் என அனைத்து தரப்பின ரையும் சந்தித்து கருத்து கேட்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப்.5 முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்று ப்பயணம் மேற்கொள்கிறது.எம்.பி.கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் தூத்துக் குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கின்றனர்.
பாரத் மாதா கி ஜெய் என கோஷமிடாதவர்களை அரசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறச் சொன்ன பாஜக அமைச்சர்
கோழிக்கோடு, பிப். 4- பாரத் மாதா கி ஜெய் என்று கோஷ மிடாதவர்களை அரசு நிகழ்ச்சி நடந்த அரங்கை விட்டு வெளியேறுமாறு ஒன்றிய வெளியுறவு- கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார். கேரளம் மாநிலம் கோழிக்கோடு ஜூப்லி ஹாலில் இளைஞர் வார நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் விவகார அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நேரு யுவ கேந்திரா, தபஸ்யா கலாவேதி மற்றும் கேலோ பாரத் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டு தனது உரையை முடித்தார். பார்வையாளர் களில் சிலர் மட்டும் திருப்பி முழக்க மிட்டனர். இது அமைச்சருக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. திருப்பி முழக்கமிடுமாறு பலமுறை கூறி ‘பாரத் மாதாகி ஜெய்’ என கை களை உயர்த்தி முழங்கினார். இருந்த போதிலும் பார்வையாளர்களில் பலர் பதிலளிக்கவில்லை. பார்வை யாளர்களில் ஒரு பெண் அப்படி முழக்கமிட வேண்டாம் என்று குறிப்பிட் டார். அப்போது ஆத்திரத்துடன் பதி லளித்த அமைச்சர், ‘இந்தியா எனக்கு மட்டும் இல்லை, அப்படி கூப்பிட சிரமப்படுகிறவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள்’ என்று கோபம் கொண்டு கத்தினார் . பார்வையாளர் களிடம் மீண்டும் மீண்டும் முழக்கத் தை எழுப்பி பதிலுக்கு அவர்களை முழக்கமிடச் சொல்லியும் பலர் முழக்க மிடவில்லை. இந்த பிரதிபலிப்பு போதுமானதாக இல்லை என்று கூறி இருக்கைக்கு திரும்பினார்.