states

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,மே 7- தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதில் முதல்நாளிலேயே 42,024 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நேரடித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10,11, 12ஆம் வகுப்பு உள்பட உயர்நிலை, மேல்நிலை வகுப்பு களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பதிவு செய்திருந்த 9,55,139 பேரில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை, அவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விசாரித்து, அறிக்கை  சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,674 மாண வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.