சென்னை, ஜன.14- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவம் வழக்கின் விசாரணை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித் துள்ளது. நேர்மையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக் கும் குடிநீரில் மலம் கலந்த கொடுமையை எதிர்த்து தமிழ்நாடே வெகுண்டெழுந்து கண் டனக்குரலை எழுப்பியது. இச்சம்பவம் அறிந்த வுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கி போராடியது. மற்ற அர சியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கண்டனக் குரலெழுப்பின. மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக் கும் மேலாகியும் உண்மையான குற்றவாளி கள் கைது செய்யப்படவில்லை. இந்த சம்ப வம் குறித்து சட்டப்பேரவையில் எழுப்பிய போது, உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தமிழக முதல மைச்சர் வாக்குறுதியளித்தார்.
இந்நிலையில் காவல்துறை மேற் கொண்ட விசாரணை பல கேள்விகளையும், அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது. இத்த கைய இழிசெயல்களில் ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, குற்ற வாளிகளை கைது செய்வதற்கான நட வடிக்கையினை காவல்துறை மேற்கொண்டி ருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக ஒட்டுமொத்த சம்பவத்தையும் திசை திருப் பும் நோக்கில் புலன் விசாரணை மேற் கொள் வதாக பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் இத்தகைய போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவல்துறை விசாரணையின் மீது சந்தேகக் கறைகள் படிந்துள்ள சூழ்நிலை யில் இவ்விசாரணையை மாற்றி அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கு விசாரணை யை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது வர வேற்கத்தக்கது. சிபிசிஐடி விசாரணையை நேர்மையான முறையில் நடத்தி உண்மையான குற்றவாளி கள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசை கேட் டுக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
சிபிஎம் மாவட்டக் குழு வரவேற்பு
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் கூறுகையில், ‘‘எங்கள் கோரிக்கை களை ஏற்று வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சிபிசிஐடி காவல்துறையினர் முறை யாக விசாரணை நடத்தி, உண்மைக் குற்ற வாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள் எனவும் நம்புகிறோம். மேலும், தமி ழக அரசு பாதிக்கப்பட்ட பட்டியலின மக்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய நிவாரணத்தொகை கிடைக்க தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என தெரிவித்துள்ளார்.