ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட் டத்தின் நர்ஹல் பகுதியில் பயங்கர வாதிகள் பதுங்கி இருப்பதாக பாது காப்புப் படையினருக்கு செவ்வாயன்று ரக சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணு வம், போலீசார், பாதுகாப்புப்படையினர் நர்ஹல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ரஜோரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தை பாதுகாப்புப்படையினர் உடனடியாக கண்டறிய முடியவில்லை. மிகுந்த சிரமத்திற்கு பிறகு பயங்கரவாதி கள் பதுங்கி இருந்த இடத்தை நோக்கி நெருங்கிய பொழுது பாதுகாப்புப்படை யினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக் கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரமாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல் லப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். முன்னதாக செவ்வாயன்று பயங்கர வாதிகளின் இருப்பிடத்தை காண தேடுதல் பணியில் ஈடுபட்ட, ஆறு வயது பெண் லாப்ர டோர் என்ற மோப்ப நாய் பயங்கரவாதி களின் துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.