states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கீழடி அருகே கொந்தகை யில் நடைபெற்ற அக ழாய்வில் கிடைத்த முது மக்கள் தாழியில், இரும்பால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  2. 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன “கிரீன்பேக் கட்த்ரோட் ட்ரவுட்(Greenback cutthroat trout)” வகை மீன்கள் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு மத்திய கொலராடோவில் பியர் க்ரீக் பகுதி நீரோட் டங்களில் ட்ரவுட் வகை மீனை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அவற்றின் முட்டைகள் பாதுகாப் பாக பராமரிக்கப்பட்டு, 2016-ஆம் ஆண்டு மீன் குஞ்சுகளுடன் பல் வேறு நீர் வழிகளில் விடப்பட்டன. 6 ஆண்டு களுக்கு பிறகு இயற்கை யான இனப்பெருக்கம் மூலம் அமெரிக்காவின் தெற்கு பிளாட் ஆற்றில் ட்ரவுட் வகை மீன்கள்  பரவலாக காணப்படு வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  3. டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4  தேர்வு முடிவுகள் வெளி யாகும் மாதம் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் அக்டோ பர் மாதத்திலும், ஜூலை 24-ஆம் தேதி நடை பெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதத் திலும் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் அறிவித்துள்ளது.
  4. இந்தியாவில் தயாரிக்கப் படும் புதிய மாடல் கார் கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர் பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை  துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. 
  5. நாட்டில் போதைப்பொ ருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அசாம் மாநிலம் நாகோன் மாவட் டத்தில் 170 கிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  6. காங்கிரஸ் தலைவர் தேர்தலில், இடைக்கால தலைவர் சோனியா காந்தி நடுநிலை வகிக் கிறார். ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 1-2 நாட்களுக்குள் முடிவு செய்வார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி.வேணுகோபால் தக வல் தெரிவித்துள்ளனர்.
  7. மக்கள் நலனுக்கான திட்டங்களில் பாஜக வுக்கு எப்பொழுதும் சிக்கல் உள்ளது. ‘துவாரே ரேஷன்’ திட்டம் (வீட்டு வாசல் ரேஷன்) சட்ட விரோதமானது என  கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வுள்ளோம் என திரிணா முல் பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறி யுள்ளார்.
  8. டேன் என்று பெயரிடப்பட்ட சூறாவளியால் கியூபாவின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கின. தலைநகர் ஹவானாவும் இதில் இருந்து தப்பிக்கவில்லை. அனைத்துப் பகுதிகளுக்கும் மீண்டும் மின் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு குழுவினர் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கியூப மின்வாரியத்தின் தொழில்நுட்ப இயக்குநர் லசாரோ குவெர்ரா தெரிவித்துள்ளார். 
  9. கையும், களவுமாகப் பிடிபட்ட ஜப்பானிய தூதரக அதிகாரியை ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆசிய-பசிபிக் நாடுகளுடனான ரஷ்யாவின் தொடர்புகள் மற்றும் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி மாகாணத்தில் மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை பற்றிய ரகசியத் தகவல்களை பரிமாறிக் கொள்ள கையூட்டு வாங்குகையில் அந்த ஜப்பானியத் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவுக்கான தூதர் உடனடியாக அழைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட அதிகாரி வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டனர்.
  10. இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜார்ஜியா மெலோனி பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலதுசாரிக் கூட்டணிக்கு 44 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஜார்ஜியா மெலோனி பொறுப்பேற்றால், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக அவர் இருப்பார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், முதன்முறையாக தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் அமரவிருக்கிறது.