மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி யில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதி பிரியா மல்லிக். இவர் உணவுத் துறை அமைச்ச ராக இருந்த போது ரேஷன் கார்டு வழங்குவதில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படு கிறது. இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக கொல்கத்தா நக ரில் உள்ள சால்ட்லேக் பகுதியில் அமைந்துள்ள மல்லிக் வீட்டில் வியாழனன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், உணவுத்துறை அமைச் சராக மல்லிக் இருந்தபோது அவ ரது உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றன. இந்த வழக்கு தொடர்பாக மல்லிக்கிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் ஏற்கெனவே கைது செய் யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.