states

“அதிமுகவே தாமரையில்தான் போட்டியிட வேண்டும்”

பாஜக ஆணவம் பாஜக-உடன் அதிமுக கூட்டணி அமைத்தால் அந்தக் கட்சி வேட் பாளர்களும் தாமரை சின்னத் தில் தான் போட்டியிட வேண்டும் என பாஜக-வைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளார். மற்றொருபுறத்தில் அதிமுக தலைவர்களில் ஒருவரான பொன்னையன், பாஜக-வுடன் கூட்டணி இல்லை. ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இது கோடி சத வீதம் நிச்சயம். கூட்டணிக் கதவு கள் திறந்திருப்பதாகக் கூறி கன வுலகில் மிதக்கிறார் அமித்ஷா. நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களுக்கும் அண்ணாமலைக் கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. பாஜக-வின் கொள்கை. அணுகுமுறையால் தான் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டோம். பாஜக-வுடன் கூட்டணி சேருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று கூறி யிருந்தார். இந்நிலையில் தான், தமிழ கத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். தாமரை வெற்றி பெறும். ஏன்? அதிமு கவே மனம் மாறி பாஜக-உடன் கூட்டணி அமைத்தால் அவர்க ளும் தாமரைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.