states

பாஜகவின் ‘பி’ டீம்தான் அதிமுக

கோயம்புத்தூர், டிச. 2- ஒன்றிய மோடி அரசின் மக்களுக்கு விரோதமான சட்டங்களுக்கு சிறு எதிர்ப்பைக்கூட தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நாங்கள் கூட்டு இல்லை என்று சொல்வது மக்களை ஏமாற்று வதற்கான நாடகமே, பாஜகவின் பி டீம்தான் அதிமுக என கோவை பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து கோயில்களை இந்து அமைப்பு களிடம் ஒப்படைக்க முதல் கையெழுத்து போடுவோம் என கூறு கிறார் அண்ணாமலை. ஆனால் 200  ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தமி ழகத்தில் ஆட்சிக்கு வரப்போவ தில்லை. டெபாசிட் ஆவது வாங்கி விட முடியாதா என்பதற்காக தான் அண்ணாமலை தற்போது நடை பயணம் சென்று கொண்டிருக்கிறார். 

வழிப்பறியைவிட மோசமானது

மருத்துவரிடம் வழக்கை திரும்பப் பெற 3 கோடி கேட்டதாக அங்கீத் திவாரி என்ற அமலாக்கத் துறை  அதிகாரி, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டிருக்கிறார். பாஜகவின் ஏவல் துறையாக இருக்கும் அம லாக்கத்துறை இப்போது கையும் களவு மாக மாட்டியிருக்கிறது. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? அமலாக்கத்துறை மூலம்  ரெய்டு நடத்தி அதில் பேரம் பேசி கட்சிக்கு தேர்தல் நிதி சேகரிக்கும் பணியை பாஜக செய்து வரு கிறது. இது வழிப்பறியை விட மோச மானது. இந்த பணத்தை வைத்துத் தான் அண்ணாமலை பாதயாத்திரை என்கிற பெயரில் சொகுசு யாத்திரை நடத்தி வருகிறார். ஒன்றியத்தை பாஜக ஆளுகிறது என்கிற தைரி யத்தில் கண்டதையும் பேசிவரும் அண்ணாமலை, மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற போது தமிழ்நாட்டில் இவர் ஆட்டமும் முடிவுக்கு வரும், அட்ரஸ் இல்லாமல் போகும். தற்போது எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக கண்ணீர் வடித்து கதறு வது போல நடிக்கிறார், எதற்கெடுத்தாலும் நடவடிக்கை எடு என அரசை கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந்தது. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியல் போட்டு காட்ட முடியும். 

பொள்ளாச்சி கொடுமை

பொள்ளாச்சியில் நடந்த கொடுமையே அதிமுகவின் ஆட்சிக்கு சாட்சி. இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மோசமான சம்பவம் அதிமுக ஆட்சியில் அரங்கேறியது. இதன் பிர தான குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை எடப்பாடி மறுக்க முடியுமா. பொள்ளாச்சி கொடூரம் சம்பவத்தை கண்டித்து, இடதுசாரி அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இந்த விவ காரத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

ருவி சுடுவதைப்போல் சுட்டார்கள். அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொன்ன வர் தான் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவ காரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் எடப்பாடியின் ஆட்சியின் லட்சணம். எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது, அமைத்த குழுவின் தலைவர் அருணா ஜெகதீசன்தான், அவரது அறி க்கையில் முதல்வருக்கு தெரியாமல் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, முதல்வராக இருந்து பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமியும் காவல்துறைக்கு பொறுப்பு என அந்த அறிக்கை சுட்டிக்காட்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி என்ன பதில் சொல்லப்போகிறார்.  அதிமுக பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டாலும் “பி’’ டீமாக  செயல்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். முத்த லாக், சிஏஏ, காஷ்மீர், மாநிலம் கலைப்பு வேளாண் விரோத சட்டம்  போன்றவற்றில், அதிமுக ஆத ரவையே தெரிவித்தது. அன்று இவர்கள் ஆதரிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டங்கள் காலாவதியாகி இருக்கும். அப்போதெல்லாம் சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல், ஆதரித்துவிட்டு இப்போது எடப்பாடி பழனிச்சாமி, சிறு பான்மை மக்களின் காவலன் என கூறுகிறார்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறது அதிமுக.

பாஜகவோடு வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில் ஒரு முறையாவது மோடியை எதிர்த்து கேள்வி கேட்டதுண்டா அதிமுக. எட்டு கோடி தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு இப்போது வேடம் போடுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இப்போது கூட ஆளுநர் அடாவடிக்கு எதிராக ஒருவார்த்தை பேசுகிறதா அதிமுக.  பேசவில்லை என்பது மட்டுமல்ல தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்படும் தீர்மானத்தை எதிர்த்து பாஜகவோடு அதிமுகவும் வெளி நடப்பு செய்கிறது. எனவே, பாஜக மற்றும் அதிமுகவினர் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது.  தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும், அத்தகைய தேர்தல் பணிகளை உடனடியாக நாங்கள் துவங்க இருக்கிறோம்.  பீக் அவர் மின் கட்டண உயர்வு,  நிலைக்கட்டண உயர்வு ஆகி யவற்றால் தமிழகத்தின் சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய அரசு செய்யாது என தொழில்முனைவோர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். ஆகவே, தமிழக அரசின் மீது நம்பிக்கைவைத்து சிறுகுறு தொழில் முனைவோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள் கிறது. போராடும், சிறுகுறு தொழில் முனைவோர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றார். சிபிஎம் கோவை பீளமேடு  நகரக்குழு செயலாளர் கே.பாண்டி யன் நன்றி கூறினார்.