சென்னை,பிப்.4- டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய தொடர் மழையால் அறுவ டைக்கு தயாராக இருந்த நெற்பயிர் கள் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- நடப்பாண்டு டெல்டா சாகுபடி பாசனத்திற்காக மே 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. சம்பா தாளடி 10.69 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் கன மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக் கெடுத்து முற்றிலும் அழிந்து போய் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான தார்ப்பாய், மற்றும் மழையால் நெல்மணிகள் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடர்மழை மற்றும் மேகமூட்டத்தால் ஈரப்பதம் குறையும் நிலையில் நெல்மணிகள் இல்லை. எனவே புதிய ஈரப்பதத் தளர்வை ஒன்றிய அரசிடம் பெற்று நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்புகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பு அளவீடுகளில் பெரும்பாலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ள நிலையில் மாநில அரசு உரிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.