சேலம், நவ.14- பணமோசடி வழக்கில், பாஜக மாநில நிர்வாகி முத்துராமன் மற்றும் பாஜக நிர்வாகியும், நடிகையுமான நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகி யோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி (45). இரும்பாலை சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண் இயக்குநராக பணிபுரிந்து வரும். இவர், தனது தொழிலினை விரிவுப்படுத்த முத்துராமன் என்பவ ரை அணுகினார். அப்போது முத்து ராமன், தான் எம்எஸ்எம்இ கவுன்சில் தேசிய சேர்மன் பதவி வகிப்பதாக வும், மேலும் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ.4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கி யதாகவும் தெரிவித்து, தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கும் மாநில சேர்மன் பதவி பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய கோபால்சாமி, கடந்த ஜூலை 10 ஆம் தேதி முத்து ராமன் மற்றும் அவரது கூட்டாளியான துஷ்வந்த் யாதவ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அவர்கள் இருவரும் கோபால்சாமிக்கு மாநில சேர்மன் பதவி வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதுகுறித்து கோபால்சாமி அளித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் மற்றும் துஷ்வந்த் யாதவ் ஆகியோ ரை கைது செய்து சிறையில் அடைத்த னர். தற்போது இந்த வழக்கின் புலன் விசாரணை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவிற்கு (சிசிபி) மாற்றப் பட்டுள்ள நிலையில், மோசடி புகாரில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதாவின் கணவர் சவுத்ரி, பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத்தலைவர் மஞ்சுநாத் உட்பட 2 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.