டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலங்கள் மற்றும் புதிய படங்கள் வெளியாகும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.
பண்டிகை காலங்கள் மற்றும் புதிய படங்கள் வெளியாகும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.