states

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கருக்கலைப்பு அனுமதி வாரியம்

சென்னை, ஜூலை 17-  தமிழ்நாட்டிலுள்ள, 32 அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும், கருவில் வளரும் சிசுவை கலைப்பதற்கான அனு மதி வழங்குவதற்கான வாரியம் அமைக்க  அரசாணை வெளியிடப் பட்டு உள்ளது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ் வுத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை யில் கூறியிருப்பது வருமாறு:- நாட்டில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்க ளும் தனி வாரியம் அமைக்க வேண்டும். அந்த வாரியம், சிசுவை  கலைக்க விண்ணப்பித்த கர்ப்பிணியை பரிசோதித்து, உரிய காரணங்கள் இருந்தால், சிசுவை கலைப்பதற்கும், இல்லாவிட்டால் நிராகரிப்பதற்குமான கருத் துருவை, மூன்று நாட்களுக்குள் வழங்கும். இந்நிலையில், தமிழ்நாட்டில் இதற்காக ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், கர்ப்பிணியர் விண்ணப்பங்களுக்கு உரிய காலத்தில் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் உள்ள, 32 அரசு மருத்துவக் கல்லூரி களிலும் தனித்தனியே கருக்கலைப் புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க, அரசு முடிவு  செய்துள்ளது. இந்த வாரியம்,  அந்தந்த கல்லூரி முதல்வர்  தலைமையில் செயல்படும். இந்த குழு, விண்ணப்பங்களை பரிசீலிப்பதுடன், மருத்துவப் பரிசோ தனை அடிப்படையில், சிசுவை கலைப்பதற்கான முடிவையும் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.