states

img

புதுப்பள்ளியில் அனுதாப வாக்கு; அரசுக்கு எதிரானது அல்ல

கேரளாவின் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து துல்லிய மான மதிப்பீடு செய்யப் படும். புதுப்பள்ளி  தேர்தலில் உம்மன் சாண்டி மறைவால் எழுந்த அனு தாபத்தையும், சோகத்தையும் காங்கிரஸ் கூட்டணி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. சட்டப்பேரவை உறுப்பி னர் இறந்த உடன் ஒரு மாதத்துக்குள் தேர்தல் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. தேர்தலை விரைவுபடுத்த தலையீடு இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், புதுப்பள்ளியில் அனுதாப அலையை ஏற்படுத்த திட்டமிட்டு முயற்சி நடந்தது. முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் மட்டும் இந்தத் தேர்தலை மதிப்பிட முடியாது. இடது ஜனநாயக முன்னணி எதிர்பார்க்காத வெற்றியை யு.டி.எப் பெற்றது. அது ஏன் நடந்தது என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். தேர்தல் மதிப்பீட்டில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்படும்.முறைகேடுகள் கண்டறியப் பட்டால் சரி செய்யப்படும்.  புதுப்பள்ளி தேர்தல் முடிவு! அரசுக்கு எதிரான கருத்து என்கிற பரப்புரை உண்மைக்கு புறம்பானது. கேரளாவில் அரசுக்கு எதிரான உணர்வு ஏற்படும் நிலை இல்லை. மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு பயனுள்ள தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. திருவோணம் பண்டிகையின் போது எந்த சலுகையும் அரசால் வழங்க முடியாது என்று  ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் ஓணம் பண்டிகை யை அனைவரும் சிறப்பாக கொண்டாட அரசு வழிவகை செய்தது.