states

தீக்கதிர் விரைவு செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  

சென்னை,நவ.12- தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் வருகிற 16 ஆம் தேதி புதிய காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், டெல்டா உள்ளிட்ட  பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவரு கிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.13) தமிழகத்தின் ஒரு சில பகுதி களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

அமைச்சர் க. பொன்முடி மனு தள்ளுபடி

சென்னை,நவ.12- சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தை யாக இருந்ததாக பதிவான வழக்கில்  இருந்து விடுவிக்கக் கோரிய அமைச்சர்  பொன்முடி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி  மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிக ளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65  ஆயிரத்து 600 ரூபாய்க்கு இழப்பு ஏற்படுத்திய தாக அமைச்சர் அவரது மகன், உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக  விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை யில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி, “இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங் கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை  தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்க ளாக உள்ளதாக கூறி, அமைச்சர் பொன்முடி யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

இரு கட்சிகளும் இஸ்ரேலுக்கு துணை போகின்றன

ஹெஸ்புல்லா குற்றச்சாட்டு

பெய்ரூட், நவ.12- அமெரிக்காவின் பிரதானக் கட்சிகளான குடிய ரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே இஸ்ரேல் அரசின் குற்றங்களுக்குத் துணை போகின்றவை யாகவே இருக்கின்றன என்று ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் சயீது ஹசன் நஸ்ரல்லா குற்றம் சாட்டி யுள்ளார். அண்மைக்காலமாக, பாலஸ்தீனத்தில் ஆக்கிர மித்துள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவத்தின் நடவ டிக்கைகள் அதிகரித்துள்ளன. எந்தவித குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சிறைக்கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். சர்வதேச சமூகம் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. லெபனானில் தியாகிகள் தினத்தை ஹெஸ்புல்லா அமைப்பு அனுசரித்தது. இதற்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய நஸ்ரல்லா, “இஸ்ரேலிய ராணு வத்தின் குற்றங்கள் மற்றும் பாலஸ்தீன மக்கள் மீதான  படுகொலை நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்கா வின் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே ஆதரிக்கின்றன. இரண்டுமே பிறநாடுகள் மீது போர் மற்றும் படையெடுப்புகளை நிகழ்த்தியுள்ளன” என்றார். லெபனானைப் பொறுத்தவரை தனது சொந்த பலத்தை நம்ப வேண்டுமொழிய, அமெரிக்காவை நம்புவதில் பலனில்லை என்று கூறிய நஸ்ரல்லா, “அமெரிக்காவின் நோக்கம் எல்லாம் ஒன்றுதான். அதற்காக அவர்கள் பலவித மான உத்திகளைக் கையாளுவார்கள். அந்த உத்திகளில் லெபனான் மக்கள் சரணடைய வேண்டியதில்லை. நமது நண்பர்களை நம்பியிருக்கலாம். இஸ்ரேலுடனான கடல் எல்லை உடன்பாடு நமது பலத்தில் உருவாகியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டு கடந்த 21 நாட்களாக நடந்து வரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொலிவியாவின் பொருளா தாரத்துறை அமைச்சர் மார்செலோ மாண்டிநீக்ரோ கோரிக்கை விடுத் துள்ளார். அமெரிக்க ஆதரவுடன் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் நடக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று இந்த வேலை நிறுத்தம் என்று கருதப்படுகிறது. சுமூக சூழலையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்றும் மாண்டிநீக்ரோ தெரிவித்துள்ளார்.

கடுமையான ஒடுக்குமுறை நிலவும் சூழலில் தேர்தல் நடக்கி றது என்று கூறி பஹ்ரெய்ன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்திருக்கின்றன. நாடு முழுவதும் தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி களில் பங்கேற்றனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசு எதிர்ப்பு அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி வந்தனர்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்க ளுக்கு முன்பாக நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்த்துக் காத்திருந்த டிரம்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருந்தா லும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை அவர் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடுவார் என்று அவருடைய உதவி யாளர் ஒருவர் கூறியுள்ளார்.