கம்யூனிசத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஏனெனில், அது மனித குலத்தின் மிகப்பெரிய இலக்காக கருதப்படும் சுதந்திரமான மற்றும் சமநிலையான; மக்களின் உலகளாவிய சமுதாய சகோதரத்துவத்தை நோக்கி நாங்கள் போராடுவதற்கு எங்களை வழிநடத்துகிறது. ஆனால், நம் மக்கள் இன்று அடிமைகளாக இருப்பது எங்களுக்கு வெட்கத்தை கொடுக்கிறது. எங்கள் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒரே கடமையை கற்றுத்தருகிறது - நமது நாட்டை விடுதலை செய்வது. எங்கள் கொள்கை தேசபக்தியுடன் இணைந்தது. அதை நிறைவேற்ற எங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வதாக நாங்கள் உறுதி கூறுகிறோம்.