states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அண்ணாமலை மீது வழக்கு'

புலம்பெயர் தொழிலா ளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகை யில் அறிக்கை வெளி யிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்  யப்பட்டுள்ளது. இரு பிரி வினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன் முறையை தூண்டும் வித மாக கருத்து தெரிவித்த தாகவும் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்  திய குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலத்தில் மின்  தேவை மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் 29.4.22 இல் அதிகபட்ச மாக இருந்த 17,563 மெகாவாட் மின்நுகர்வு சனிக்கிழமையன்று  கடந்தது என்றும்  டான் ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி தெரி வித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலா ளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க தில்லியில் தமிழ்  நாடு தனிப்படை போலீ சார் முகாமிட்டுள்ளனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், ஆய்வாளர் ஐயப்பன் உள்பட 7 பேர்  கொண்ட தனிப்படை போலீஸ் தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசால் பாதிக் கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் அநீதி யை எதிர்த்துப் போராட வும்  ‘இன்சாப்‘ என்ற புதிய தளத்தை மாநிலங்க ளவை உறுப்பினர் கபில் சிபல் தொடங்கியுள்ளார்.

கடலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கொட்டகையில் பட்டாசு கள் வெடித்த விபத்தில், 6-க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில், கோசலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.