“சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீர் பண்டிட் அல்லது காஷ்மீர் இந் துக்கள் பள்ளத்தாக்கில் இருந்து இடம் பெயர வில்லை; அண்மையில் ஜம்முவுக்கு இடம் பெயர்ந்த பண்டிட்டுகள், பெண்கள், குழந்தைகள் கூட அரசு ஊழியர்கள்தான்” என்று ஒன்றிய அரசின் உள்துறை இணை யமைச்சர் நித்யானந்த ராய் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடந்த மோதல்களில் 366 தீவிர வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்கள் 96 பேரும், பாதுகாப்புப் படை யினர் 81 பேர் உயிர் இழந்துள்ளனர்” என் றும் அவர் கூறியுள்ளார்.