states

‘என்எல்சி விரிவாக்கத்திற்கு 80 ஹெக்டேர் நிலம் தேவை

கடலூர், மே 11- என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தற்போது 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு 1,000  மெகாவாட் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது என்று என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். என்எல்சி இந்தியா நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தி செய்வதில் பிரதான அங்கம் வகித்து வருகிறது. இந்நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் கூடுதல் நிலங்களை கைய கப்படுத்த முயன்றது. இதற்கு அப் பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடலூரில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலை வர் பிரசன்னகுமார் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தற்போது 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு, 1,000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.

80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சார உற்பத்தியை சீராக செய்ய முடியும். என்எல்சியில் புதிதாக 1,800 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த வேலை முழுவது மாக உள்ளூர் மக்களுக்கு வழங்கப் படும். 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுத லாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பிருந்தே என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன. 15 ஆண்டு களுக்கு முன்பு நிலம் கையகப்படுத் தப்பட்டதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படு கிறது. இதுவரை இழப்பீடு வாங்காத வர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இது தான் காரணமே தவிர, ஒவ்வொரு பகுதிக்கும் இழப்பீட்டில் மாற்றம் என்பதில் உண்மை அல்ல. கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றால் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசுக்கு என்எல்சி நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கி றது. இந்த மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வெளிச் சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு ரூ.10 அல்லது ரூ.12 கொடுக்க வேண்டி யுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.