சென்னை, ஜூன் 5- தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவி னாஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கரூர் எஸ்பியாக சுந்தரவதனம், மதுரை எஸ்பியாக சிவ பிரசாத், திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன், திருவாரூர் எஸ்பியாக சுரேஷ்குமார், இராமநாதபுரம் எஸ்பியாக தங்கதுரை, திருவள்ளூர் எஸ்பியாக பி.சி.கல்யாண் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி யாக சந்தோஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சைபர் கிரைம் துணை ஆணையர் பதவி மத்திய குற்றப்பிரிவில் உருவாக்கப் பட்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.