சில்க்யாரா, நவ. 19- உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழி லாளர்களை மீட்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உறுதியான பதில் அளி க்காமல் குழப்பி வருவதால், 40 தொழிலாளர்கள் மற்றும் அவர் களது குடும்பங்கள் பரிதவித்து வரு கின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி- யமுனோ த்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்க பாதையில் நவம்பர் 12 அன்று அதிகாலை 4 மணி அள வில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதை யில் மண் சரிந்தது. இருபுறமும் மண் மூடியதால் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட னர். சுரங்கப்பாதையில் 40 தொழி லாளர்கள் ஞாயிறன்றுடன் 8-வது நாளாக சிக்கியுள்ள நிலையில், தொழி லாளர்களுக்கு உடல் மற்றும் மனநிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று சம்பவ இடத்திற்குச் சென்ற ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மீட்பு பணி நடவடிக்கை களை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “ஆர்ஜர் இயந்திரம் சரியாக செயல்பட்டால் சுரங்கத்துக்குள் சிக்கி யிருக்கும் தொழிலாளர்கள் இன்னும் 2-3 நாட்களில் மீட்கப்படுவார்கள். உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் உயிருடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதி செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிறப்பு இயந்திரங்களைக் கொண்டு வருவதற்காக பிஆர்ஓ (Border Roads Organization) மூலமாக புதிய சாலைகள் போடப்படுகின்றன.
பல்வேறு இயந்திரங்கள் இங்கு வந்துள்ளன. தற்போது இரண்டு ஆர்ஜர் இயந்திரங்கள் துளையிடும் பணி களைச் செய்து வருகின்றன” என்று தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி 2-3 நாட்களில் மீட்கப்படுவார்கள் எனக்கூறியுள்ள நிலையில், பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, “இங்கு வேலை செய்யும் பல்வேறு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உள்ளே சிக்கி யிருக்கும் தொழிலாளர்கள் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் மீட்கப்பட லாம். கடவுளின் கருணை இருந்தால் அது இன்னும் சீக்கிரமாக முடியும்” என்று தெரிவித்துள்ளார். நிதின் கட்காரி, பாஸ்கர் குல்பே ஆகியோரின் இருவேறு கருத்து களால் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் பரிதவித்து வருகின்ற னர். ஏற்கனவே 4 நாட்களுக்கு முன் மீட்பு பணி மந்தமாக நடைபெறுவ தாகவும், புதிய திட்டம் இல்லாமல் மீட்புப்பணி நடைபெறுவதாகவும் கூறி சுரங்கத்திற்கு வெளியே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.