மேகாலயாவில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மேகாலயாவில் வியாழனன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 9.26 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஷில்லாங், கிழக்கு காசி மலை மாவட்டத்தின் தலைமையகம், ரி-போய் மற்றும் அசாமின் கம்ரூப் மாவட்டத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் வடகிழக்கில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.
தேசிய பழங்குடியின திருவிழா: மோடி தொடங்கி வைத்தார்!
தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில், ‘ஆதி மஹோத்சவ்’ என்ற தலைப்பி லான மெகா தேசிய பழங்குடியின விழாவை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று தொடங்கி வைத்து, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சி யில் பழங்குடி கலாச்சாரம், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய பழங்குடியினர் விவகாரங்க ளுக்கான அமைச்சகம் சார்பில் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
2023 ஜனவரியில் சரக்குகள் ஏற்றுமதி 6.58% சரிவு!
2023 ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி 6.58 சதவிகி தம் குறைந்து 3,291 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. 2022 ஜனவரியில் 3,523 கோடி டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதியாகி இருந்தது. தற்போது அதைக்காட்டிலும் 6.58 சதவிகி தம் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதேபோல 2023 ஜனவரி மாதத்தில் நாட்டின் இறக்குமதியும் 3.63 சதவிகிதம் குறைந்து ரூ. 5,066 கோடி டாலராக சரிந்துள்ளது. எனினும், வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையிலான வித்தியாசம்) 2023 ஜனவரியில் 1,775 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது ஒன்றிய வர்த்தக அமைச்சகமே வெளியிட்ட புள்ளிவிவரமாகும்.
உலகின் 9-ஆவது பணக்காரரானார் முகேஷ் அம்பானி
பங்குச் சந்தை சார்ந்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அதிகம் சொத்து படைத்த பணக்காரர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளி யிட்டுள்ளது. இதில், ‘அதானி குழும’த் தலைவர் கவுதம் அதானி 24-ஆவது இடத்திற்கு இறங்கி யுள்ள நிலையில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் 9-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலராக உள்ளது. அம்பானி, அதானி தவிர்த்து, ஷிவ் நாடார் (56-ஆவது இடம்) சைரஸ் பூனாவல்லா (79- ஆவது இடம்), லட்சுமி மிட்டல் (90 ஆவது இடம்), சாவித்திரி ஜிண்டால் (94-ஆவது இடம்) ஆகிய மேலும் 4 இந்தியர்கள் டாப்-100 பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
மாநிலங்கள் விரும்பினால் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி!
“பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவ தற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. மாநில அரசுகளிடையே இதுதொடர் பாக ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். மாநில அரசுகள் ஒன்றாக முடிவெடுத்தால், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும். எரிபொருள் மீது எத்தனை சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் என்பதைக்கூட மாநில அரசுகளே ஒருமித்த கருத்துடன் முடிவு செய்ய முடியும். அப்படி முடிவெடுத்தால் அதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மூலம் அமல்படுத்த முடியும்” என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோதுமை விலை கிலோ ரூ.5 சரிவு: ஒன்றிய அமைச்சர்
மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் கோதுமை விலை கிலோவுக்கு சுமார் ரூ. 5 சரிந்துள்ளதாக ஒன்றிய அரசின் உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். “தற்போது கோதுமையின் மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரத்து 500-ஆக குறைந்துள்ளது. அதன் சில்லரை விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 300 முதல் ரூ. 3 ஆயிரத்து 400 வரையிலான விலையிலிருந்து ரூ. 2 ஆயிரத்து 800 முதல் ரூ. 2 ஆயிரத்து 900 வரை குறைந்துள்ளது. எனினும், கோதுமை ஏற்று மதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசு பரிசீலிக்கவில்லை” என்றும் சஞ்சீப் சோப்ரோ குறிப்பிட்டுள்ளார்.
மாதவிடாய் கால விடுமுறை: பிப்.24-இல் விசாரணை
அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவி களுக்கு ‘மகப்பேறு பலன்கள் சட்டம் 1961’-இன் கீழ், மாதவிடாய் கால விடுமுறை அளிப்ப தற்கான விதிகளையும் வகுக்குமாறு, ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தர விடக் கோரி, தில்லியைச் சேர்ந்த ஷைலேந்திர மணி திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி யிருந்தார். இந்நிலையில், இந்த மனு பிப்ரவரி 24 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.
கேள்வி கேட்டால் இடுப்பை உடைப்பாராம்!
“மத்தியப்பிரதேசத்தில் வளர்ச்சியை நாங்கள் தொடங்குகிறோம். இங்கே பிரச்சனையை உரு வாக்க முயற்சிக்கும் அனைவரையும் பூட்டி வைப்போம். இது அரசாங்கக் கூட்டம். இதற்கு இடையூறு விளைவிப்பவரின் இடுப்பை காவல்துறையினரை வைத்து உடைப்போம்” என அம்மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். “அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வரவில்லை” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறியபோது, அமைச்சர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இந்தியா - பாக். எல்லையில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கிரண், தங்தார் திட்வால் பள்ளத் தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலை வைக்கப்படும் என அம்ஹி புனேகர் என்ற அமைப்பு அறிவித்துள்ளது. எதிரிகளை எதிர்த்துப் போரிடும் இந்திய ராணுவ வீரர்கள், வலிமையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த சிலை நிறுவப்பட உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
திப்புவின் சீடர்களுக்கு பாஜக மிரட்டல்
“நாங்கள் ராமர், அனுமான் பக்தர்கள். நாங்கள் அனுமானுக்கு பிரார்த்தனை செலுத்து கிறோம். நாங்கள் திப்பு-வின் சந்ததியினர் அல்ல. திப்புவின் சந்ததிகளை வீட்டுக்கு அனுப்பு வோம். இந்த மாநிலத்திற்கு அனுமான் பக்தர்கள் தேவையா திப்புவின் வழித்தோன்றல்கள் தேவையா? நான் ஒரு சவால் விடுக்கிறேன். திப்புவின் தீவிர சீடர்கள் இந்த வளமான மண்ணில் உயி ருடன் இருக்கக் கூடாது” என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியுள்ளார்.
4 மாணவிகள் நீரில் மூழ்கி பலி ஆசிரியர் கைது; பள்ளிக்கு விடுமுறை
புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் இலுப் பூர் அருகேயுள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், தொட்டியம் பகு தியிலுள்ள தனியார் கல்லூரியில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப தற்காக புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். திரும்பி வரும்போது மாயனூர் காவிரியாற்றில் தண்ணீரில் இறங்கி குளிக்கும் போது எதிர்பாராத விதமாக 4 மாணவிகள் பலியாகினர். இச்சம்ப வத்தால் பிலிப்பட்டி கிராமமே சோகத் தில் மூழ்கியது. இச்சம்பவத்தில், கவ னக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி யின் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். புதன்கிழமை இரவு மாணவி களின் உடல்கள் கரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட் டன. இதர மாணவிகளும் பத்திரமாக ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவத்தால் மாணவிகளின் உறவினர்களும், பொதுமக்களும் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். மேலும், ஆசிரியர் கோ. செபசகாயூஎப்ராஹிமை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து புதன் கிழமை இரவு மாணவிகளின் உடல் கள் அடக்கம் செய்யப்பட்டன. அஞ் சலி செலுத்தும் வகையில், பிலிப்பட்டி பள்ளிக்கு வியாழக்கிழமை விடு முறை அளிக்கப்பட்டது.
10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடியை சுருட்டிய கும்பல்
சென்னை, பிப்.16- சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப் படும் டெபாசிட் தொகைக்கு 15 விழுக்காடு வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக முகவர்களையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் முகவர்களாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள். இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்து. நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டித் தருவதாக ஆசை காட்டி ரூ.800 கோடி மோசடி வழக்கில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவிரியில் மூழ்கி பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார் அமைச்சர்
புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிவாரணத்தொகை வழங்கினார். இலுப்பூர் வட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, சோபியா (7ம் வகுப்பு), தமிழரசி (8ம் வகுப்பு), இனியா (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா (6ம் வகுப்பு) ஆகிய 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கி பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து ஆறுதல் தெரிவித்து, அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை மாணவிகளின் குடும்பத்தினரிடம் புதன்கிழமை நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.