states

சரவணா தங்க மாளிகையின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்

சென்னை, ஜூலை 3 - சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை நிறுவனம், லாட்டரி மார்ட்டின் ஆகியோருக்கு சொந்த மான பல கோடி மதிப்புள்ள சட்ட விரோத சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.  மார்டின்  பல மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வந்ததாகவும், மாநில லாட்டரி சீட்டு களை போலியாக அச்சடித்து, விதி முறைகளை மீறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாகவும் சிபிஐ  தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மார்ட்டினின் பல்வேறு சட்டவிரோத சொத்துகளை அமலாக்கத்துறை தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்நிலையில் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை அமலாக்கத்துறை சனிக்கிழமை முடக்கியுள்ளது. இதே போன்று இந்தியன் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த விவகா ரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை நிறுவனத்திற்கு சொந்த மான ரூ.235 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இவை அனை த்தும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் முன்னதாக. கடந்த 2017ம் ஆண்டு பிரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை ஆகிய நிறுவனம் இந்தியன் வங்கிக்கு ரூ.400 கோடி கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் கடந்த ஜனவரி மாதம் கடையை ஜப்தி செய்து சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.