சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர்
சென்னை, ஆக.1- சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதி சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேக மாக வந்த கார் நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை காவலர்கள் பின் தொடர்ந்தனர். அப்போது, ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் இருவரும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 ரவுடிகள் என்க வுண்ட்டரில் கொல்லப்பட்டனர். காவல் துறையினர் என்கவுண்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரவுடிகள் வந்த கார் கதவில் உள்ள கைப்பிடி, அவர்களின் 2 செல் போன்கள் உள்ளிட்டவற்றில் உள்ள கைரேகை பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2 ஆம் கட்டமாக விண்ணப்ப விநியோகம்
சென்னை,ஆக.1- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்துக்குத் தகுதியான பயனாளி களை தேர்ந்தெடுக்கும் வகையில் முதல் கட்ட விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப்பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 24 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விண்ணப்பங்களை ரேசன் கடைகள் மூலம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று நிறைவடைந் துள்ளது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான 2 ஆம் கட்ட விண்ணப்பம் வழங்கும் பணி ஆக.1 அன்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
செஸ் போட்டியில் கலக்கும் 6 வயது சிறுவன்
புதுக்கோட்டை, ஆக.1- புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியின் மகன் கவி ரூபன் (6). இந்த சிறுவன் புதுக்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடை பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, கவிரூபனை புதுக் கோட்டையிலுள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர். பின்னர், கவிரூபன் செஸ் விளையாட கற்றுக் கொண்டு புதுக் கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டி களில், திருவாரூரில் தமிழ்நாடு முதல மைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவை மாண வன் கவிரூபன் தன்னுடைய பெற்றோரு டன் சந்தித்தார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளை யாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கவிரூபன் மழலைச் மொழியில் கூறும்போது, “செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பை கள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம்”என்று தெரிவித்திருக்கிறார்.
500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை
சென்னை, ஆக.1- அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்த தால், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச் சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக 302 ரேசன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த நிலையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் 500 ரேசன் கடைகளில் ஆக. 1 முதல் தக்காளி கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நபர் ஒரு வருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். சென்னையில் 100 ரேசன் கடைகளில், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகளில்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், நெல்லை, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்க ளில் 15 கடைகளிலும். கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்க ளில் 10 கடைகளிலும்; அரியலூர், குமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங் களில் 5 கடைகளிலும் ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படு கிறது.
உலகச் செய்திகள்
தங்கள் தலைநகர் மாஸ்கோ மீதான ஆளில்லா விமானங்கள் மூலமாக “பயங்கரவாதத்” தாக்குதல்கள் முயற்சிகளைத் தடுத்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதிகாலையில் மூன்று ஆளில்லா விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்த முற்பட்டிருக்கின்றன. இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்டன. மற்றொன்று தாக்கப்பட்டதால் வேறு பகுதிக்குச் சென்று கீழே விழுந்தது. எந்தவித சேதமும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக ஈரானும், சிரியாவும் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் எதிர்மறை அணுகு முறையால் பாதிக்கப்பட்டுள்ள இருநாடுகளும், தங்களுக் கிடையிலான அனைத்துத்துறை ஒத்துழைப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளன. தடைகளைத் தாண்டும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவில், டினா போலு வார்ட்டே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள். தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் முகாமிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளின்போது பத்திரிகையாளர்கள் 12 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு காயமடைந்திருக்கிறார்கள்.
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது பல்வேறு வழக்கு தொடர்பாக 33 வருட சிறைத்தண்ட னைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள தாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சூகி முற்றிலுமாக விடுவிக்கப் படவில்லை எனவும், 14 வழக்குகளை எதிர்கொண்டு தொடர்ந்து வீட்டுச்சிறையிலேயே இருப்பார் என ராணுவம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, ஆங் சான் சூகி உட்பட ஜனநாயக அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட டாங்கிகள் மற்றும் காலாட்படை சண்டை வாகனங்கள் உட்பட 2,227 யூனிட் ராணுவ உபகரணங்களும் உக்ரைனில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஜூலை மாதம் மட்டும் உக்ரைன் 21,000 துருப்புக்களை இழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பேர் புனித நூலான குர்ஆன்னின் நகலை எரித்தது சுவீடன் நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. குர்ஆன் எரிப்பு தாக்கு த ல்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.