தீவிர இந்துத்வா அமைப் பான விஸ்வ ஹிந்து பரி ஷத் (விஎச்பி) நாடுமுழுவ தும் 2,281 இடங்களில் “சௌரிய ஜாக்ரன்” என்ற பெயரில் மத வெறுப்பு யாத்திரை நடத்தமிட் டுள்ளது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 15 வரை நடை பெறும் இந்த “சௌரிய ஜாக் ரன்” யாத்திரை மூலம் “லவ்-ஜிஹாத்” மற்றும் “மதமாற்றம்” தொடர்பான பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க் கவே, யாத்திரை நடத்தப்பட வுள்ளதாக விஎச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் அறிவித்துள்ளார். மதக்கலவரத்தை ஏற்படுத்த திட்டமா? “சௌரிய ஜாக்ரன்” யாத் திரை “லவ்-ஜிஹாத்” மற்றும் “மதமாற்றம்” தொடர்பான பிரச்சனைக்கான யாத் திரை என விஎச்பி கூறினாலும், வர விருக்கும் 5 மாநில சட்டப்பேர வைத் தேர்தல், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், ஜனவரி 2024-இல் அயோத்தி ராமர்கோவிலின் திறப்பு விழாவிற்கான ஆயத்த அணிதிரட்டல் என பல்வேறு ஆதாயங்களுக்காக இந்த யாத் திரை நடத்தப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.