சென்னை,ஜூன் 23- தமிழ்நாட்டில் வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் வசதிக் காக ரூ.160 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார். வனத்துறை சார்பில், அத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பங்கேற்று, திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வசதிக்காக நடப்பாண்டில் சுமார் 100 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.160 கோடி யில் மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 454 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 4 ஆண்டுக்கு ஒரு முறை மேம்படுத்தவும், நெடுஞ் சாலைகளுக்கான வனப்பகுதி இணைப்புச் சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விரைவு நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. வன விலங்கு கள் மக்கள்வசிக்கும் கிராமப் பகுதிகளுக்குள்வராமல் தடுக்க அகழிகளை பராமரிக்க பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.