கோவை, ஜூலை 14- பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார காவல் படை போலீ சாருடன் இணைந்து, மீன் கரை சாலை, மோதிராபுரம் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ் வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய் தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 23 வெள்ளை மூட்டைகளில் மொத்தம் 1,150 கிலோ தமிழ்நாடு அர சின் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த சேகர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத் திய விசாரணையில், சேகர் சூளேஸ்வரன்பட்டி, மோதி ராபுரம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, கேரளாவில் உள்ள கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய் தது தெரிய வந்தது. இதைய டுத்து அவர் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனத்தை போலீ சார் பறிமுதல் செய்தனர்.