கண்ணூர், ஏப்.5- கண்ணூர் மாவட்டத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தின் பிறப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய சிறு புத்தகம் கண்ணூர் தி ரெட் லாண்ட். சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பரிசாக வழங்க மாநாட்டு வரவேற்புக் குழு வால் இந்த புத்தகம் தயாரிக்கப் பட்டது. 104 பக்க ஆங்கிலப் புத்த கம் கண்ணூரின் சுருக்கமான அரசியல் வரலாற்றை விவரிக்கிறது. கட்சி உருவானது முதல் மொராழா, தலச்சேரி, மட்டனூர், கையூர், கரிவெள்ளூர், காவும் பாயி, கண்டக்கை உள்ளிட்ட இடங் களில் நடந்த கம்யூனிஸ்ட் போரா ட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சி முடிவடைகிறது, போராட்டங்கள் தொடர்கின்றன என்கிற நான்காவது அத்தியாயம், 1947 க்குப் பிறகு நடந்த பல போராட்டங்களையும், 1948 இன் கல்கத்தா ஆய்வறிக்கையைத் தொடர்ந்து நடந்த கொடூரமான மனித வேட்டையையும் சித்தரிக் கிறது. மக்கள் எழுச்சிக்கு கட்சி எவ்வாறு அடித்தளம் அமைத்தது என்பதை அலசி, இந்நூல் நிறைவு பெறுகிறது.