ஜம்மு, டிச.25- காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதி கள் சிலர் பதுங்கி இருப்ப தாக பாதுகாப்புப் படையின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப் புப் படையினர், காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து சோபியான் மாவட்டத்தில் சனியன்று காலை தீவிர தேடு தல் வேட்டை நடத்தினர். சவ் ஹம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங் கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீ ரென துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இந்த தாக்குதலைய டுத்து பாதுகாப்புப் படையின ரும் பதிலடி தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.