states

img

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி மோதல் ராணுவ கேப்டன் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்ட வனப்பகுதியில் செவ் வாயன்று மாலை முதல் பயங்கர வாதிகளுக்கும் - பாதுகாப்பு படையின ருக்கும் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஷிவ்கர் - அசார் பெல்ட் பகுதியில் நடைபெற்ற துப்பாக் கிச் சண்டையில் இந்திய ராணுவ கேப்டன் தீபக் சிங் உயிரிழந்ததாகவும், உள்ளூர்வாசி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக ராணுவம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதுகாப் புப் படையினரின் பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலால் ராணுவ கேப்டன் பலியான விவகாரம் காரண மாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.

தோடா மாவட்டத்திற்கு எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட் டத்தில் உள்ள பாட்னிடாப் அருகே தங்கி யிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்  படையினர் தாக்குதலுக்கு பிறகு, வனப் பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்குள் ஊடுருவியுள்ளதாகவும், தோடா மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ அமைச்சகம் அவசர ஆலோசனை

சுதந்திர தினத்துக்கு ஒருநாள் முன்ன தாக தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தி ருப்பதையடுத்து ராணுவ அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உயர்மட்ட ஆலோ சனை நடத்தியதாக தகவல் வெளியாகி யுள்ளன.