சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் உள்ள கெர்வாஹி பள்ளியில் பழங்குடி மாணவர்கள் மட்டும் 70 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளி யில் பணியாற்றும் ஆசிரியர்கள் மதிய உணவு இடைவேளையில் பள்ளியில் இருந்து வெளியே உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அபொழுது 20-க்கும் மேற் பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மட்டும் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட கழி வறைகளை பயன்படுத்தியதாக கூறப்படு கிறது. இந்த விஷயம் தெரிந்தவுடன் ஆசிரி யர்கள், இதற்கு தண்டனையாக கொதிக்க வைக்கப்பட்ட எண்ணெய்யை 25 மாண வர்களின் கையில் ஊற்றியுள்ளனர். இத னால் மாணவர்களின் கைகளில் கொப் பளம் ஏற்பட்டது. இதனை கண்டு கொந்த ளித்த மாணவர்களின் பெற்றோர்கள் கல் வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த னர். புகாரை விசாரித்த கல்வி அதிகாரி கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோஹ்ரி மார்கம், ஆசிரியர்கள் மிதாலி வர்மா, பூனம் தாக்கூர் ஆகியோரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். கழி வறையை பயன்படுத்தியதற்காக பழங்குடி மாணவர்களின் கைகளில் ஆசிரியர்கள் கொதிக் கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது.